Monday 23 March, 2009

அதனாலொன்றும்...

உன் நிழல் கூட
என் மீது படிவதில்லை...
அதனாலொன்றும் கவலையில்லை..

உதிர்க்கிற வார்த்தைகளில்
ஒன்றுகூட அன்பாயிருப்பதில்லை..
அதனாலொன்றும் மோசமில்லை..

கடக்கிற நொடிகளில்
பார்வை கூட பரிமாறப்படுவதில்லை..
அதனாலொன்றும் நட்டமில்லை...

ஒரே வீட்டில்
இப்படி இருக்க முடியுமா?
என்பவர்களுக்கு
அதிலொன்றும் ஆச்சரியமில்லை.

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?