புறப்பட்ட இடத்திற்கே
திரும்புகிறேன்...
குறுகிய கால
அனுபவமெனினும்
அதுபோதும்
வாழ்நாள்முழுமைக்கும்..
கசப்பானவையோ
இனிப்பானவையோ
அவை அனுபவங்கள்தான்..
உணர்வுகளையும்
உரிமைகளையும்
அடகு வைக்க நேருகிறது.
மீட்டெடுக்க முடியாத
நேரத்தில்....
இழப்புகளோடு
புறப்பட்ட இடத்திற்கே
திரும்புகிறேன்...
புதிய வலிகளை
ஏற்றுக்கொள்வதிலும்
பழைய வலிகளோடு
ஒத்துப் போய் விடலாம்.. என
திரும்புகிறேன்
புறப்பட்ட இடத்திற்கே...
No comments:
Post a Comment