Friday 18 July, 2008

வேர்கள்

எனது நம்பிக்கையின்
வேர்கள்
பல இடங்களில் காயப்பட்ட போதும்
இரத்த கசிவில்லை...
வாக்குறுதிகளையும்
வாஞ்சையினையும்
நம்பிய நட்பின்
கன்னித்திரை கிழிபட்டது
உன் துரோகத்தால்...
இனிமேலதை தைக்க முடியாதுதான்
ஆனால் நிரந்தரமாய் மூடிக்கொள்ள
உன்னால் கற்றுக்கொண்டேன்
முன்னால் நண்பனே....

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?