துரியோதனர்களும்
துச்சாதனர்களும்
அதிகரித்து விட
கண்ணன்களும் கூட
மாறிப் போயினர்..
கண்ணன்கள்
கண்டு ரசிப்பதில்
அதி ஆர்வமாய்..
கர்ணன்கள்
கயவர்கலாகி
சுண்டு விரல் மோதிரத்தையும்
சுட்டு விடுவதில்
வல்லவர்களாய்..
சகுனிக்கும்
கூனிக்கும்
அரசாட்சி..
துர்வாச முனிவரும்
விஸ்வாமித்திரரும்
அடுக்கு மாளிகையில்
தொலைக்காட்சி முன்..
இங்கே இதில்
உனைக் காப்பாற்ற
உன்னை விட்டால்
வேறு யாருமில்லை...
Tuesday, 20 January 2009
கலியுகம்
ராமன்களுக்கு
மண்டோதரிகள்
தேவைப்படுகிறார்கள்..
வால்மீகிகளின்
புராணப்படைகள்
புரட்டப்படுகின்றன..
லட்சுமணன் சீதையின்
குளியலறை வழியே
குளிர்காய்கிறான்..
இருளல்லாத சூழலில்
பார்வைப் பின்னலில்
அகளிகைகலாகும் சிலர்..
கர்ணன்
துரியோதனின் ஆட்சியைக்
கைப்பற்றுகிறான்...
அர்ஜுனன்
கண்ணனோடு
போரில் எதிர் நிற்கிறான்..
குந்தி தேவியை
திருமணத்திற்கு பிறகும்
தொடரும் சூரிய தேவன்...
பாண்டியன் மாதேவி
நெடுஞ்செழியன்
சிதைக்கு தீ வைக்கிறாள்..
கட்டை விரலோடு
கைகளையும் சேர்த்துக்
கேட்கும் துரோணாச்சாரியர்கள்...
மனுநீதி சோழர்கள்
ஆராய்ச்சி மணி
அடிப்பவர்களைத்தான்
தேர்க்காலிலிட்டு
நசுக்குகிறார்கள்..
இப்படியாய் இன்னும்
தொடர்கிறது சில...
மண்டோதரிகள்
தேவைப்படுகிறார்கள்..
வால்மீகிகளின்
புராணப்படைகள்
புரட்டப்படுகின்றன..
லட்சுமணன் சீதையின்
குளியலறை வழியே
குளிர்காய்கிறான்..
இருளல்லாத சூழலில்
பார்வைப் பின்னலில்
அகளிகைகலாகும் சிலர்..
கர்ணன்
துரியோதனின் ஆட்சியைக்
கைப்பற்றுகிறான்...
அர்ஜுனன்
கண்ணனோடு
போரில் எதிர் நிற்கிறான்..
குந்தி தேவியை
திருமணத்திற்கு பிறகும்
தொடரும் சூரிய தேவன்...
பாண்டியன் மாதேவி
நெடுஞ்செழியன்
சிதைக்கு தீ வைக்கிறாள்..
கட்டை விரலோடு
கைகளையும் சேர்த்துக்
கேட்கும் துரோணாச்சாரியர்கள்...
மனுநீதி சோழர்கள்
ஆராய்ச்சி மணி
அடிப்பவர்களைத்தான்
தேர்க்காலிலிட்டு
நசுக்குகிறார்கள்..
இப்படியாய் இன்னும்
தொடர்கிறது சில...
காதல்
காதல் ஒரு போதை
காட்டு வழி பாதை
கல் தடுக்கி விழுந்தேன் -உன்
கண் தடுக்க புதைந்தேன்
காதல் ஒரு நீரு
தாகம் அதில் நூறு
மூழ்கடித்து போகும் -அதில்
மூச்சும் திணறிப் போகும்
காதல் ஒரு யானைப்பசி
வாழைப்பழம் எல்லாம் தூசி
அள்ளக் குறையாத அட்சயமே
அணைக்கும் பசியை நிச்சயமே..
கல்லூரியில் பாடம்
கற்றுக் கொள்ளும் நேரம்
காதல் வந்து கலைத்தது
கவிதையாலே வளைத்தது..
தீண்ட வந்த காதல் என்னைத்
தின்று போனதேன்?
வானம் பறந்த சிறகுகள்
கூண்டில் அடைந்ததேன்?
போதும் போதும் லீலைகள்
பொய்தான் காதல் வேலைகள்
கால்கள் இரண்டும் நடக்கும் -அதில்
காதலின் தடம் கிடக்கும் -என்
கண்கள் இரண்டும் பார்க்கும்-அதில்
காதல் முத்துக் கோர்க்கும்
அமைதியில் என் மனம்
நூலகத்தின் அடுக்காய்..
அதிரடியாய் காதல்
புரட்டியது துடுக்காய்..
சாய்ந்து கொள்ள தோள்கேட்டு
காதல் என்னை கெஞ்சியது..
சரியென்று ஒத்துக் கொள்ள
சாய்த்து விட்டு துள்ளியது..
உன்னை நான் மீண்டும்
பார்க்கவும் வேண்டாம்..
உயிரினை நீயும்
உருக்கவும் வேண்டாம்..
காதல் ஒரு தொல்லைதான்
கண்கள் அதற்கு இல்லைதான்
காமம் அதன் எல்லைதானே
காதலுக்கு இல்லை வேலி
காதல் காலம் எல்லாம் போலி
கண்ணீர் துளி அதன் கூலி
சொல்லிக் கொண்டும் வரவில்லை
சொல்லிவிட்டும் செல்ல வில்லை
காதலின் லீலையில்
கவிழ்ந்தேன் மூலையில்
காட்டு வழி பாதை
கல் தடுக்கி விழுந்தேன் -உன்
கண் தடுக்க புதைந்தேன்
காதல் ஒரு நீரு
தாகம் அதில் நூறு
மூழ்கடித்து போகும் -அதில்
மூச்சும் திணறிப் போகும்
காதல் ஒரு யானைப்பசி
வாழைப்பழம் எல்லாம் தூசி
அள்ளக் குறையாத அட்சயமே
அணைக்கும் பசியை நிச்சயமே..
கல்லூரியில் பாடம்
கற்றுக் கொள்ளும் நேரம்
காதல் வந்து கலைத்தது
கவிதையாலே வளைத்தது..
தீண்ட வந்த காதல் என்னைத்
தின்று போனதேன்?
வானம் பறந்த சிறகுகள்
கூண்டில் அடைந்ததேன்?
போதும் போதும் லீலைகள்
பொய்தான் காதல் வேலைகள்
கால்கள் இரண்டும் நடக்கும் -அதில்
காதலின் தடம் கிடக்கும் -என்
கண்கள் இரண்டும் பார்க்கும்-அதில்
காதல் முத்துக் கோர்க்கும்
அமைதியில் என் மனம்
நூலகத்தின் அடுக்காய்..
அதிரடியாய் காதல்
புரட்டியது துடுக்காய்..
சாய்ந்து கொள்ள தோள்கேட்டு
காதல் என்னை கெஞ்சியது..
சரியென்று ஒத்துக் கொள்ள
சாய்த்து விட்டு துள்ளியது..
உன்னை நான் மீண்டும்
பார்க்கவும் வேண்டாம்..
உயிரினை நீயும்
உருக்கவும் வேண்டாம்..
காதல் ஒரு தொல்லைதான்
கண்கள் அதற்கு இல்லைதான்
காமம் அதன் எல்லைதானே
காதலுக்கு இல்லை வேலி
காதல் காலம் எல்லாம் போலி
கண்ணீர் துளி அதன் கூலி
சொல்லிக் கொண்டும் வரவில்லை
சொல்லிவிட்டும் செல்ல வில்லை
காதலின் லீலையில்
கவிழ்ந்தேன் மூலையில்
Subscribe to:
Posts (Atom)
இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..
அமைதி,அழகு,தனிமை