Tuesday 20 January, 2009

பெண்ணே

துரியோதனர்களும்
துச்சாதனர்களும்
அதிகரித்து விட
கண்ணன்களும் கூட
மாறிப் போயினர்..

கண்ணன்கள்
கண்டு ரசிப்பதில்
அதி ஆர்வமாய்..

கர்ணன்கள்
கயவர்கலாகி
சுண்டு விரல் மோதிரத்தையும்
சுட்டு விடுவதில்
வல்லவர்களாய்..

சகுனிக்கும்
கூனிக்கும்
அரசாட்சி..

துர்வாச முனிவரும்
விஸ்வாமித்திரரும்
அடுக்கு மாளிகையில்
தொலைக்காட்சி முன்..

இங்கே இதில்
உனைக் காப்பாற்ற
உன்னை விட்டால்
வேறு யாருமில்லை...

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?