Tuesday 20 January, 2009

காதல்

காதல் ஒரு போதை
காட்டு வழி பாதை
கல் தடுக்கி விழுந்தேன் -உன்
கண் தடுக்க புதைந்தேன்

காதல் ஒரு நீரு
தாகம் அதில் நூறு
மூழ்கடித்து போகும் -அதில்
மூச்சும் திணறிப் போகும்

காதல் ஒரு யானைப்பசி
வாழைப்பழம் எல்லாம் தூசி
அள்ளக் குறையாத அட்சயமே
அணைக்கும் பசியை நிச்சயமே..

கல்லூரியில் பாடம்
கற்றுக் கொள்ளும் நேரம்
காதல் வந்து கலைத்தது
கவிதையாலே வளைத்தது..

தீண்ட வந்த காதல் என்னைத்
தின்று போனதேன்?
வானம் பறந்த சிறகுகள்
கூண்டில் அடைந்ததேன்?

போதும் போதும் லீலைகள்
பொய்தான் காதல் வேலைகள்

கால்கள் இரண்டும் நடக்கும் -அதில்
காதலின் தடம் கிடக்கும் -என்
கண்கள் இரண்டும் பார்க்கும்-அதில்
காதல் முத்துக் கோர்க்கும்

அமைதியில் என் மனம்
நூலகத்தின் அடுக்காய்..
அதிரடியாய் காதல்
புரட்டியது துடுக்காய்..

சாய்ந்து கொள்ள தோள்கேட்டு
காதல் என்னை கெஞ்சியது..
சரியென்று ஒத்துக் கொள்ள
சாய்த்து விட்டு துள்ளியது..

உன்னை நான் மீண்டும்
பார்க்கவும் வேண்டாம்..
உயிரினை நீயும்
உருக்கவும் வேண்டாம்..

காதல் ஒரு தொல்லைதான்
கண்கள் அதற்கு இல்லைதான்
காமம் அதன் எல்லைதானே

காதலுக்கு இல்லை வேலி
காதல் காலம் எல்லாம் போலி
கண்ணீர் துளி அதன் கூலி

சொல்லிக் கொண்டும் வரவில்லை
சொல்லிவிட்டும் செல்ல வில்லை
காதலின் லீலையில்
கவிழ்ந்தேன் மூலையில்

1 comment:

Anonymous said...

huh. love this style


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?