இப்படியெல்லாம்
நடக்குமென்று தெரியாது..
அந்த
ஆலமரம் சரிந்த பின்னே
அதனின் நிழலில் இளைப்பாறிய
அந்த நான்கு பறவைகளும்
திசைமாறி போகுமென்று..
அவை முன்னர்
உணர்ந்ததுமில்லை..
ஆலமரத்தினால்தான்
வேர்கொண்டுள்ளோமென..
இப்போது வருந்துகின்றன..
வேரினை இழந்த பின் ..
விதை தேடி..
No comments:
Post a Comment